TAMIL CHALLENGED READERS.... CERTAINLY NOT FOR U :)
This is an article published by Tamil news daily DINAMANI on the VIOLIN ensemble conducted at THAYAGARAJA SANGEETHA VIDVATH SAMAJAM, MYLAPORE on 17 july 2010 by CARVA Rajasekar & Disciples.
25 வில்லாளர்கள்!

First Published : 25 Jul 2010 12:00:00 AM IST


மைலாப்பூரில் உள்ள தியாகராஜ வித்வத் சமாஜத்தில்,​​ இருபத்தி ஐந்து வயலின் வாத்தியக் கலைஞர்கள் வில்லை இழைக்க சேர்ந்திசையாக ஒலித்த நாதத்தைக் கேட்பது ​ செவிக்குணவென்றால்,​​ அதைக் கண்ணாரக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும்.​ இவர்களை உருவாக்கியதில் முழுப்பங்கு சி.ஏ.​ ராஜசேகருக்கே உரியது.​ "கார்வா' என்ற அமைப்பின் ஸ்தாபகரும்,​​ சங்கீத கலாநிதி எம்.​ சந்திரசேகரனின் சீடருமான இவரிடம்,​​ நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் கேட்ட முதல் கேள்வி -​ ​ "குழந்தைகளுக்கு வயலின் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும்,​​ "பல வயலினிசை' என்ற கோட்பாடும் உங்கள் மனதில் எப்படி உதித்தது?' என்பதுதான்.

இந்தக் கேள்விக்கு ராஜசேகர் அளித்த பதில்:​ ""கற்க வருபவர்களும் சரி,​​ பெற்றோர்களும் சரி,​​ பக்க வாத்தியமாக எப்பொழுது மேடையேறலாம் எனும் எதிர்பார்ப்புடன் தான் இருக்கிறார்கள்.​ கச்சேரியில் வயலின் வித்வான்,​​ மெயின் கலைஞருடன் ஒத்துப் போய்,​​ பக்க வாத்தியமாக மட்டுமின்றி பக்கா வாத்தியமாகவும் இருக்கணும்.​ இதற்கு சில வருடங்கள் ஆகும்.​ முதலில் வந்து சேர்ந்தவுடன் உண்டாகும் ஆர்வத்தை வளர்ப்பது எப்படி? பொறுமையைக் கொண்டு வருவது எப்படி? இவ்வாறு எண்ண எண்ண,​​ குழந்தைகளையும் மற்றவர்களையும் குழுக்களாக வாசிக்க வைக்கலாம்;​​ இது அவர்களை ஊக்குவிக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது.​ கீதம் தெரிந்தவர்கள் ஒரு க்ரூப்,​​ வர்ணம் நிலையில் இருப்பவர்கள் ஒரு வட்டத்தில்.​ இந்த விதத்தில் தான் கார்வா வளர்ந்தது என்று விளக்கமாக பதிலளிக்கிறார்.​ இவரது பார்வையும் எளிய சித்தாந்தமும் நமக்குத் தெளிவாகிறது.​ ​ ​ ​

நவம்பர் 12ஆம் தேதி 2000ஆம் ஆண்டு,​​ அயோத்யா மண்டபத்தில் 57 வயலின்களுடன் கார்வாவின் முதல் நிகழ்ச்சி,​​ எனது குருநாதரின் முன்னிலையில் நடந்தது.​ நல்ல வரவேற்பும் பாராட்டும் பெற்றது.​ நான் எடுத்த முதல் படி சரியானது தான் என்று அங்கீகாரம் அளிப்பது போலிருந்தது.​ இன்று 120 மாணவமாணவியர் "கார்வா'வில் பயின்று வருகிறார்கள்.​ இவர்களில் எனது கணிப்பில் ஒரு பத்து பேராவது மிகச் சிறந்த வித்வான்களாகப் பரிமளிக்கப் போவது உறுதி.​ இந்தத் தேர்ந்தவர்களை என்னுடன் மேடையில் அமர்ந்து வாசிக்கப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறேன்.

எங்களது பரம்பரை வயலினுடன் பல காலங்களாகவே பற்றுடன் இருந்திருக்கிறது.​ "சி.ஏ.' என்ற எனது இனிஷியலே எனது தகப்பனார் சித்தூர் அப்பன்னாவைக் குறிக்கும்.​ இவர் ஒரு வயலின் வித்வான்.​ எனது முதல் குரு இவர்தான்.​ இவரது சகோதரர்களும் வயலின் கலைஞர்கள்.​ எனது பாட்டனார் வேதாசல ஐயர் வயலின் மட்டுமின்றி,​​ புல்லாங்குழலும் வாசிக்க வல்லவர்.​ என் அளவில் இசைத் துறையில் இசைக் கலைமணி பட்டம் பெற்று,​​ பின் சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து முதுநிலை பட்டமும் பெற்றுள்ளேன்.​ இதிலும் இதற்கடுத்து தொடர்ந்து நான் மேற்கொண்ட எம்.ஃபில்.,​​ படிப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளேன்.​ மேற்கத்திய இசையில் எனது குருநாதர் வி.எஸ் நரசிம்மன்.​ இந்த முறையைக் கற்றதன் பயனாக எனக்கு வயலின் இசைப் பற்றி மேலும் பரவலாகவும் விசாலமாகவும் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாயிற்று.​ ​

எம்.ஃபில்.,​​ ஆய்வுக்காக நான் எடுத்துக் கொண்ட தலைப்பு வயலினில் கற்றுக் கொடுக்கும் முறைகள் என்பதே.​ எனது ஆய்விற்கு வழிகாட்டியாக முனைவர் பிரமீளா குருமூர்த்தி அவர்கள் இருந்தார்கள்.​ பல்கலைக் கழகத்தில் நேரடியாகக் கற்றதில்,​​ இசை போதிக்கும் வழிகளும் அதிலுள்ள நுணுக்கங்களும் என்னால் பார்த்தும்,​​ கேட்டும்,​​ அனுபவித்தும் தெரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் பள்ளியில் விடுமுறை என்பதே இல்லை.​ 24 X​ ​ ​ 7 என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கும்.​ தீபாவளியன்று பட்டாசு சத்தத்தில் வாசிக்க இயலாது என்ற காரணத்தாலும்,​​ ஆயுத பூஜையன்று வாத்திய வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதாலும்,​​ இந்த இரண்டு தினங்கள் மட்டும் விடுமுறைகள் போல அனுசரிக்கப்படும்.​ எனது மனைவி மாலினி,​​ எனது பெண் அபூர்வா,​​ இருவரும் வயலின் வாசிக்கும் திறம் பெற்றவர்களாதலால்,​​ சில வகுப்புகளை அவர்கள் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது.​ வகுப்பு இடைவிடாமல் நடந்தேறவும் உதவுகிறது.​ ​

சென்ற ஆறு வருடங்களாக மே மாதத்தில் திருவையாற்றில் தியாகராஜரின் சன்னதியில் நாங்கள் வாசித்து வருகிறோம்.​ 2006 ஆம் ஆண்டு நாதாஹாரமாக ஒரு மாலை வடிவில் அவர்களை அமரவைத்து வாசித்தது அனைவருக்கும் ஒரு பக்திபூர்வமான அனுபவமாக அமைந்தது'' என்றார் ராஜசேகர்.​ அவரிடமிருந்து நிறைவுடன் விடை பெற்றோம்.​ ​ ​ ​

ஆர்வலன்

படம்: மணலி அருண்

Courtesy : Dinamani.com


|

Read Users' Comments ( 0 )

My Latest Interview in Jaya TV

PART 1



PART 2



PART 3



PART 4



|

Read Users' Comments ( 0 )